மனவேதனையில் இருந்து வந்த ரஜினி பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்து எங்கு சென்றார்ன்னு தெரியுமா?

rajini dhanush aishwarya upset ரஜினிகாந்த் broke-up திருமண விழா திறப்பு
By Nandhini Feb 08, 2022 06:31 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த விவாகரத்து அறிவிப்பால் ரஜினி மிகுந்த மனஅழுத்தத்தில் ஆழ்ந்துள்ளார். இதன் காரணமாக ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்பாவின் இந்த நிலை மாற வேண்டும் என்றால் நீ கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம், அம்மா லதா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐஸ்வர்யாவும் ரஜினியின் கோபத்தை போக்க மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து விஷயத்தால் ரஜினியின் அடுத்த படமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் ரஜினி தன் சினிமா வாழ்க்கையில் தற்போது கவனம் செலுத்தவில்லை. ரஜினி தற்போது எப்படி இருக்கிறார் என்ற கவலை அவர்களது ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவரது இல்லத்திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியின் இல்லத்திற்கு சென்றார். அப்போது ரஜினியுடன் புகைப்படமும் எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதனையடுத்து, தற்போது ரஜினி பல நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.

சென்னையில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ரஜினி வந்திருக்கிறார். அவருடன் மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா உடன் இருந்தனர். ஆனால், ஐஸ்வர்யா ரஜினியுடன் வரவில்லை.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது பல நாட்கள் கழித்து ரஜினியை பொது இடங்களில் பார்த்த அவரது ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

மனவேதனையில் இருந்து வந்த ரஜினி பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்து எங்கு சென்றார்ன்னு தெரியுமா? | Dhanush Aishwarya Broke Up Rajini Upset