தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து - உடைந்து அழுத ரஜினி - சோகத்தில் ரசிகர்கள்
பெயர், புகழ், சொத்து, சுகமெல்லாம் இருந்தும், மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர் ஸ்டாருக்கு வந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். நடிகர் ரஜினி, தான் நினைத்தபடி தனது முதல் மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் போனது.
இதனையடுத்து, தனது இளைய மகள் சவுந்தர்யாவை தனது சமூகத்தை சேர்ந்தவருக்கே திருமணம் செய்து வைத்தார். இந்த உறவு 7 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இதனையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டார் சவுந்தர்யா.
மகளின் விவாகரத்துக்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ரஜினி. கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இந்நிலையில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தற்போது விவாகரத்து செய்துள்ளதால், மிகவும் மனமுடைந்த நடிகர் ரஜினி கடும் அப்செட்டில் உள்ளார். நேற்று இரவு தான் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பு வெளியானது.
நேற்று காலையில் இருந்தே ரஜினி வீட்டில் கிடையாது. அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டதாக ஊடகத்தினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் வீட்டை விட்டு சென்றதற்கான உண்மையான காரணம் மகளின் விவாகரத்து முடிவு தான் காரணமாம்.
அவர் எங்கு போனார் என்கிற விவரம் இதுவரை வெளியாகவில்லை. தனிமையை தேடி எங்கோ சென்று விட்டதாக கூறப்படுகிறது. எவ்ளவோ பெயர், புகழ், சொத்து, சுகமெல்லாம் சேர்த்ததற்கு பின்னரும், மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர் ஸ்டாருக்கு வந்துவிட்டதே என்று அவரது ரசிகர்கள் கண்ணீரில் புலம்பி வருகிறார்கள்.