தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள்... - தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
தனுஷும், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 பிள்ளைகள் உள்ளனர்.
திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்ததை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் தலைவரை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், விவாகரத்து குறித்த தனுஷின் அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் ஒருவரோ, அம்மா லக்ஷ்மி ராமகிருஷ்ணன், இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா... 2 பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், அவர்கள் மரியாதையான முறையில் பிரிகிறார்கள். ஒருவரையொருவர் அசிங்கமாக பேசாமல், முறைப்படி விவாகரத்து பெறும் முன்பு யாரையும் காதலிக்காமல் பிரிகிறார்கள். அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.