தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கேள்வி - டென்ஷனாகி சீறிப் பாய்ந்த கஸ்தூரி ராஜா
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கேள்வியால் சட்டென்று கஸ்தூரி ராஜா டென்ஷனாகி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர். ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா
சமீபத்தில், தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா அவரது பள்ளியில் விளையாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விழாவில், மகன் யாத்ரவுக்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா, பாடகர் விஜய் ஏசுதாசின் குடும்பத்தினர் இடம் பெற்றனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக இணைந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
கடுப்பான கஸ்தூரி ராஜா
இந்நிலையில், தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேட்டி அளித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டதும் கஸ்தூரி ராஜா டென்ஷனாகிவிட்டார். என்ன கேள்வி இது. இது சம்பந்தம் இல்லாத கேள்வி. இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்கக்கூடாது. இதனால்தான் நான் மீடியா பக்கமே வருவது கிடையாது.
அத்துமீறி கேள்வி கேட்குறீங்க என்று அந்த பத்திரிகையாளரை பார்த்து சற்று கோபமாக பேசினார். இதன் பின்னர் கூட இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.