ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆச்சு? - மறுபடியும் கையில் பிளாஸ்டருடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Hospital dhanush aishwarya photo viral தனுஷ் ஐஸ்வர்யா broke-up வைரல் புகைப்படம் மருத்துவமனை சிகிச்சை
By Nandhini Mar 07, 2022 09:45 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

விவாகரத்து அறிவித்த சில நாட்களில் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதித்தது. அப்போது, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், காய்ச்சல், வெர்டிகோவால் (தலைசுற்றல்) மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். ஆனால் இன்ஸ்பையரிங்கான டாக்டர் உங்களை வந்து சந்தித்தால் மருத்துவமனை அனுபவம் மோசம் இல்லை. உங்களை சந்தித்ததன் மூலம் மகளிர் தினம் நன்றாக துவங்கியிருக்கிறது. கவுரவம் மேடம் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கையில் நிறைய பிளாஸ்டர் இருந்ததால், ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஐஸ்வர்யாவிற்கு மறுபடியும் என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துக்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.