ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழாவிட்டால்.... - தனுஷ் குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷ் குறித்து பயில்வான் ரங்கநாதன் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
தனுஷ் ஒரு நல்ல நடிகர். ஒரு நல்ல தந்தையாகவும் உள்ளார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘அசுரன்’ படம் வெளியான பின்பு, இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
ஆனால், ஐஸ்வர்யாவை அவர் விவாகரித்து விஷயத்தால் கொஞ்சம், கொஞ்சமாக ரசிகைகளை அவர் இழந்துவிடுவார். அதனால் அவர் ஐஸ்வர்யா ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என்று தெரிவித்திருக்கிறார்.