அன்று என்னை உதைத்தீர்கள்... இன்று... நீங்கள்... - தனுஷ் பாணியில் ஐஸ்வர்யா வெளியிட்ட உருக்கமான பதிவு

divorce dhanush aishwarya 2 sons தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து
By Nandhini Mar 22, 2022 05:27 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் 'ராக் வித் ராஜா' சென்னை தீவு திடலில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில், தன்னுடைய இரு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.

தனுஷ் பிரிவுக்குப் பிறகு மகன்கள் இருவரும் முத்தமிட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,

என் வயிற்றில் இருக்கும்போதே என்னை உதைத்தாய்

இப்போது நீங்கள் அனைவரும் வளர்ந்து

மணமகனாக இருக்கும்போது என்னை முத்தமிடுகிறீர்கள்

நீங்கள் இருவரையும் மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி

நான் திருப்பிச் செலுத்தும் ஒரே வழி பிரார்த்தனை

இது உங்களால் அளவிட முடியாத அன்பு

உன்னை வளர்த்து, நீ வளர்வதைப் பார்த்து நான் என்றென்றும் பொக்கிஷமாக இருப்பேன்

என்று மகன்களை குறித்து உருக்கமாக ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.