முதன்முறையாக இந்தி படத்தை இயக்கும் ஐஸ்வர்யா - குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கினார்.
அனிருத்தின் இசையில், தமிழில் ‘பயணி’ என்ற தலைப்பில் இப்பாடல் தற்போது வெளியாகிள்ளது. இப்பாடல் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தி மொழியில் முதன்முறையாக ‘Oh Saathi Chal’ என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.