மீண்டும் தனுஷ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யாவிற்கு வந்த வாழ்த்துச் செய்தி - ரசிகர்கள் மகிழ்ச்சி

Dhanush Divorce Aishwarya தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து Broke-up
By Nandhini Mar 04, 2022 06:39 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 'முசாபிர்' பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தினமும் சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யா ரொம்ப ஆக்டிவ்வாக ‘முசாபிர்’ பாடல் குறித்து அப்டேட் செய்து வருகிறார். தற்போது 'முசாபிர்' வெளியாகும் தேதியையும் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யாவிற்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்த போது, ‘அவர் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று கீதாஞ்சலி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.