‘என் புது காதலுக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்...’ - ஐஸ்வர்யாவின் பதிவின் தலைப்பை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து ரசிகர்கள் கவலை ‘முசாபிர்’ காதல் பாடல்
By Nandhini Feb 27, 2022 08:36 AM GMT
Report

கடந்த மாதம் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காதல் கணவரை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா தன்னுடைய கவலைகளை மறக்க, பிஸியாக வேலை பார்த்து வருகிறார்.

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வருகிறார். ‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம்.

இந்நிலையில், ‘முசாபிர்’ பாடலின் 2-வது நாள் ஷூட்டிங் நடந்து வருகிறது. அப்போ, எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஐஸ்வர்யா, என் புது காதலுக்கு ஆசிகள் தேவை என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

சட்டென்று இந்த பதிவின் தலைப்பைப் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டார்கள். பின்னர் தான், அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘முசாபிர்’ எனும் புது காதல் தொடர்பாகத் தான் ஆசி கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா என்பது புரிந்தது.

அனிருத்தின் இசை மனதை துளைக்க, இப்பாடல் எப்போ வெளியாகுமோ என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யாவை பாராட்டி வரும் ரசிகர்கள், அண்ணி... அண்ணனுடன் சேர்ந்து வாழுங்கள்... என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.