ஐஸ்வர்யா செய்த செயல்... - அண்ணி.. நீங்க வேற லெவல்... - பாராட்டி தள்ளும் தனுஷ் ரசிகர்கள்
கடந்த மாதம் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நடிகை சமந்தா, விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு, சமூகவலைத்தளத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரை அதிரடியாக நீக்கினார்.
ஆனால், தனுஷ் வேண்டாம் என்றாலும், ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை இன்று வரை நீக்காமல் உள்ளார்.
அதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகிறார்கள். ப்ளீஸ்... சேர்ந்து வாழுங்க.. அண்ணனை விட்டு இவ்வளவு நாட்கள் பிரிந்தது போதும்... அண்ணி. தயவு செய்து அவருடன் மீண்டும் சேர்ந்துவிடுங்கள். யாத்ரா, லிங்கா பாவம்.... நீங்கள் மீண்டும் சேர்வீர்கள் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.