‘ஐஸ்வர்யாவை விவாகரத்துலாம் செய்ய மாட்டேன்...’ - மனம் மாறிய தனுஷ் - நடந்தது என்ன?
விவாகரத்து விஷயத்தில் நடிகர் தனுஷ் மனம்மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
திருமணமாகி 18 ஆண்டுகளான நிலையில், விவாகரத்து அறிக்கை வெளியிட்டது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது. ரசிகர்கள் இருவரும் சேர்ந்து விடுங்கள் என்று தனுஷுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில், குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விவாகரத்து விஷயத்தில் தனுஷ் மனம்மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனக்கு கிடையாது என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்று தனுஷ் தன்னுடைய வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். தற்போதுவரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவை தான் தனுஷ் எடுத்திருக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் மனநிலையில் அவர் தற்போது கிடையாது என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
You May Like This