தனுஷ் பற்றி ஐஸ்வர்யாவிடம் போட்டுக் கொடுத்தவர்கள் இவர்கள்தானாம்..? - இதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சினையாம்?

Sivakarthikeyan problem dhanush Anirudh aishwarya சிவகார்த்திகேயன் broke-up அனிரூத் fans upset
By Nandhini Feb 07, 2022 07:50 AM GMT
Report

தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை ஏற்பட சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தும்தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், அவர்களின் பிரிவு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமாகிய ‘3’ படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதிலிருந்து ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகி வந்துள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்பதை சிவகார்த்திகேயன் அவ்வப்போது ஐஸ்வர்யாவிடம் தெரிவித்து வந்துள்ளாராம்.

இது பிடிக்காமல் தான் தனுஷ், சிவகார்த்திகேயன் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், தனுஷை பற்றி அவரின் மனைவியிடம் சிவகார்த்திகேயன் ஒருபோதும் போட்டுக் கொடுக்க வாய்ப்பு இல்லை என்றும், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அனிருத்தும் தனுஷ்ஷைப் பற்றி ஐஸ்வர்யாவிடம் போட்டுக் கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால்தான் அனிருத்தால்தான் தனுஷ் கழற்றிவிட்டதாக பேச்சு கிளம்பி இருக்கிறது. தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்தில் தற்போது சிவகார்த்திகேயன், அனிருத் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் பற்றி ஐஸ்வர்யாவிடம் போட்டுக் கொடுத்தவர்கள் இவர்கள்தானாம்..? - இதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சினையாம்? | Dhanush Aishwarya Broke Up

You May Like This