லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி

India Accident Ahmedabad
By DHUSHI Jun 13, 2025 11:39 AM GMT
Report

அகமதாபாத் விமான விபத்தில் லண்டனில் குடியேறுவதற்காக வேலையை உதறிய மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரங்கள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, விமானத்தில் பயணித்த 68 வயதான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

அவர், குஜராத் முதலமைச்சராக கடந்த 2016 முதல் 2021 வரையில் பொறுப்பில் இருந்துள்ளார். தனது மகளுடன் வசித்து வரும் மனைவியை குஜராத்துக்கு அழைத்து வர சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிட காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.

குடும்பத்துடன் உயிரிழப்பு

அதே போன்று விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதிக் ஜோஷி என்பவர் லண்டனில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி கோமி வியாஸ் (Komi Vyas) ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் இருந்தனர். லண்டனுக்கு குடிபெயரும் விதமாக கோமி வியாஸ் தனது மருத்துவப் பணியை துறந்துவிட்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் விமானத்தில் புறப்பட்ட பொழுது குறித்த விபத்து நடந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி | Details Of Those Killed In Ahmedabad Plane Crash

மேலும், திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்கவிருந்த புதுமணப்பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான குஷ்புவுக்கு விபுல் என்ற மருத்துவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

கணவர் லண்டனுக்கு சென்று கடவுசீட்டு வேலைகளை முடித்து விட்டு லண்டனுக்கு கணவரை பார்க்க ஆசையாக சென்ற பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா பயணியின் கடைசி நிமிடம்

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி | Details Of Those Killed In Ahmedabad Plane Crash

இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி ரே மீக் (Jamie Ray Meek) என்பவர் இந்திய பயணத்தை நிறைவு செய்து விட்டு, சொந்த நாட்டுக்கு திரும்பும் வேளையில் உயிரிழந்துள்ளார். அவர் கடைசியாக அகமதாபாத் விமான நிலையத்தில் தனது நண்பருடன் அமர்ந்தபடி இந்தியாவிற்கு குட் பை சொன்ன வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில் அவர், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர் இருவரும் சிரித்த முகத்துடன் காணொளி எடுத்துள்ளனர்.

அதே வேளை, மணிப்பூரை சேர்ந்த 22 வயதான விமானப் பணிப்பெண் நந்தோய் சர்மா(Nganthoi Sharma) என்பவரும் விமான விபத்தில் உயிரிழந்தார். இதனைக் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழும் காட்சி, பார்ப்பவர்களை பதறச் செய்துள்ளது.

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி | Details Of Those Killed In Ahmedabad Plane Crash

அதே விமான விபத்தில் பாலிவுட் நடிகர் விக்ரந்த் மேஸ்ஸியின் உறவினரும், துணை விமானியுமான கிளிவ் குந்தர் (Clive Kunder) ஆகியோரும் உயிரிழந்தார். இதனை விக்ரந்த் மாஸ்ஸி உறுதி செய்துள்ளார்.

உயிர் தப்பிய பெண்

இவ்வளவு உயிர் பலிகளுக்கு மத்தியில், விபத்துக்குள்ளான விமானத்தை தவறவிட்ட பெண்ணொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்தியாவை சேர்ந்த பூமி சவுகான் (Bhoomi Chauhan) என்பவர் கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். அவ்வப்போது விடுமுறைக்கு இந்தியா வந்திருக்கிறார்.

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி | Details Of Those Killed In Ahmedabad Plane Crash

விடுமுறை முடிந்து மீண்டும் லண்டனுக்கு செல்லும் வேளையில், போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடங்கள் தாமதமாகி, விமானத்தை தவற விட்டுள்ளார். இதனால் தன்னுடைய உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி பூமி சவுகான் நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.       

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் குடும்பம்.. விமான விபத்தில் பலி | Details Of Those Killed In Ahmedabad Plane Crash