சந்திரயான் 3 வெற்றியில் முக்கியமான கவுரிமணி...திண்டுக்கல்லை சேர்ந்த இவரை பற்றி தெரியுமா?

Tamil nadu ISRO Chandrayaan-3
By Karthick Aug 25, 2023 09:45 AM GMT
Report

சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியில் திண்டுக்கல் பெண் என்ஜினியர் கவுரிமணி முக்கிய பங்காற்றிய இருக்கிறார். 

சந்திரயான் 3

நிலவின் தென்துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள தனது இரண்டாவது முயற்சியில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்று உலகநாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இது வரை நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு விண்கலமும் இறங்காத நிலையில், அதனை இந்திய விஞ்ஞானிகள் செய்து காட்டி இருக்கிறார்கள்.

details-about-isro-scientist-gauramani

இந்நிலையில், தான் அதன் வெற்றிக்கு உழைத்த பல விஞ்ஞானிகள் பலரை குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் குழுவில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கவுரிமணி என்ஜினியராக பணியாற்றியுள்ளார்.  

கவுரிமணி 

சந்திரயான்-3 திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் செயல்பட்டது போல, திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுரிமணி டெலி கமாண்ட் சாப்ட்வேர் (Tele command software engineer) வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளார்.

details-about-isro-scientist-gauramani

கவுரிமணி மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில், தொலை தொடர்பு பொறியியல் பிரிவில் எம்.இ. பட்டம் பெற்றவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், 23 ஆண்டுகளாக செயற்கைக்கோள் விஞ்ஞானியாக கவுரிமணி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுரிமணியின் பணி   

சந்திராயன்-3 நிலவில் கால் பதிக்க உதவிய லேண்டர் சாதனம் மற்றும் சந்திரனில் தரையிறங்கி ஆய்வினை மேற்கொண்டு வரும் ரோவர் ஆகியவற்றை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான கமெண்ட்(command)டுகளை உத்தரவிடும்க் பணியில் கவுரிமணி ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.  

details-about-isro-scientist-gauramani

கவுரிமணியின் கணவர் டாக்டர் வீ.ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.