நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை - பிரபல நடிகை பகீர் பேட்டி..!
நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பிரபல நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா குறித்து பதிவிட்டு வரும் நடிகை பிரியா ஆனந்த்,
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
எப்படியாவது யாராவது வதந்திகளைப் பரவ செய்வதால் நானும் சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்கத் தெரியும்.
நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்'' என்று தெரிவித்துள்ளார்.