ரயில் நிலையம் எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம் - அதிகாலையில் நடந்த கொடூரம் சம்பவம்!
நாக்பூர் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
நாக்பூர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரயிலுக்காகப் பயணிகள் காத்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென வந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த 7 நபர்கள் மீது கட்டையைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார்.இதனால் வலி தாங்காமல் அவர்கள் அலறி கதறியுள்ளனர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப முயன்ற நபரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தாக்குதல்
அந்த தாக்குதலில் 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஜெயராம் ராமாவதார் கேவட் (35 வயது) என்பதும் தெரிய வந்துள்ளது.மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.