தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் பிச்சைக்காரர்கள் - திரிணாமுல் கட்சி வேட்பாளர் பேசிய வீடியோவால் பரபரப்பு!
இன்று மேங்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் கட்சியின் வேட்பாளர் சுஜாதா மொண்டல், தாழ்த்தப்பட்ட சமூக வாக்காளர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரிணாமுல் கட்சி வேட்பாளர் சுஜாதா மொண்டால் தாழ்த்தப்பட்டவர்களை பிச்சைக்காரர்கள் என அழைக்கும் வீடியோவை பாஜக தற்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறது. அந்த வீடியோவில், மேற்கு வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக மம்தா பானர்ஜி எவ்வளவு பணிகளைச் செய்துள்ளார், ஆனால் அவர்கள் இயற்கையாகவே பிச்சைக்காரர்கள் என்பதால் அவர்கள் பாஜக முகாமை நோக்கி நகர்கின்றனர்.
வங்காளத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை இயற்கையாகவே அவர்கள் பிச்சைக்காரர்கள். மேற்கு வங்காள மக்கள் திரிணாமுல் கட்சிக்கு பொருத்தமான பதிலைக் கொடுத்து அவர்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியுமா? தலித் சமாஜ் (ராஜ்பன்ஷி, மாதுவாஸ், நமசூத்ராஸ்) சிறந்ததை பெற தகுதியுள்ளவர்கள் என தெரிவித்துள்ளார்.
Sujata Mandal of Trinamool, close to Mamata Banerjee, blatantly accuses the Scheduled Caste community of Bengal as “beggars by nature”.
— BJP Bengal (@BJP4Bengal) April 10, 2021
Can the people of Bengal give TMC a befitting reply and throw them out of power? Dalit Samaaj (Rajbanshi, Matuas, Namasudras) deserves better. pic.twitter.com/bJT4acPiCN
இதனையடுத்து, ஒரு டிவி நிகழ்ச்சி நேர்காணலில், சுஜாதா மொண்டல் பேசும்போது, இங்குள்ள பட்டியல் சாதியினர் இயல்பாகவே பிச்சைக்காரர்கள். மம்தா பானர்ஜி அவர்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்கும் பிறகும், அவர்கள் பாஜக அவர்களுக்கு அளிக்கும் சிறிய பணத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் தங்கள் வாக்குகளை பாஜகவுக்கு விற்கிறார்கள் என குற்றம் சாட்டியிருந்தார்.
திரிணாமுல் கட்சியின் வேட்பாளர் சுஜாதா மொண்டல், தாழ்த்தப்பட்ட சமூக வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.