நம்ப வைத்து ஏமாற்றிய மல்யுத்த வீராங்கனை...50 லட்சத்தை இழந்து புலம்பும் டெல்லி எஸ்.பி..!

Wrestling Delhi India
By Karthick Aug 30, 2023 05:19 AM GMT
Report

பிரபல மல்யுத்த வீராங்கனை ரூனக் குலியா தன்னிடம் இருந்து 50 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக டெல்லியை சேர்ந்த எஸ்.பி பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

தீபக் சர்மா   

பாடிய பில்டிங்கில் அதீத ஆர்வம் கொண்ட தீபக் சர்மா, அந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல சர்வதேச தேசிய பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவர் தற்போது திகார் சிறையில், எஸ்.பி'யாக பணியாற்றி வருகின்றார்.

delli-sp-lost-50-lakhs-to-wrestling-woman

பிட்னஸ் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் தீபக் சர்மா இணையத்திலும் பிரபலமாக இருந்து வருகின்றார். இந்நிலையில், இவர் தற்போது தேசிய மல்யுத்த வீராங்கனை ரூனக் குலியா தன்னிடம் இருந்து50 லட்ச ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றி விட்டார் என பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.   

50 லட்சம் ஏமாற்றினர் 

இது குறித்து அவர் தெற்கு டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான மல்யுத்த வீராங்கனை ரூனக் குலியா மற்றும் அவரது அன்கித் குலியா இருவரும் நல்ல நட்புறவை ஏற்படுத்தி கொண்டனர் என தெரிவித்தார்.

delli-sp-lost-50-lakhs-to-wrestling-woman

அவ்வாறு ஏற்பட்ட நட்பிற்கு விளைவாக பாடி பில்டிங் தொழிலில் முதலீடு செய்தால் அதில் நிறைய வருவாய் எட்டும் என தன்னை நம்ப வைத்து, தன்னிடம் இருந்து 50 லட்ச ரூபாய் பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்த தொழிலில் சரியான வருமானம் நிலையில், தன்னிடம் வாங்கிய பணத்தை அவர்கள் திரும்ப தரவில்லை என தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.