மோடி வித்தைக்காரர்... தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Rahul Gandhi BJP Narendra Modi India Election
By Vinoja Apr 17, 2026 03:01 PM GMT
Report

மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த மசோதா நிறைவேறாது என்பது ஆளும் கட்சிக்குத் தெரியும் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

இன்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த மசோதா குறித்து மேலும் பேசுகையில், “பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர் . மேஜிக் காட்டுவது போல 3 மசோதாக்களை ஒன்றின் மீது ஒன்றாக மறைத்து கொண்டு வந்துள்ளார்.

மோடி வித்தைக்காரர்... தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Delimitation Bill Is Anti National Rahul Gandhi

மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் பீதியில் இதனை கொண்டுவந்துள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதா மூலம், இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.இது வெட்கக்கேடானது.

இதனை மகளிர் மசோதா என திசை திருப்புவதா? தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற அனுமதிக்க மாட்டோம்.

இது தென்னிந்திய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சிக்கும் "தேசவிரோத செயல்" என குறிப்பிட்டுள்ளார்.