"இறந்து போன தந்தை உயிர்த்தெழ"... - 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

Delhi
By Nandhini Nov 12, 2022 06:28 AM GMT
Report

இறந்து போன தன் தந்தையின் உயிரை திரும்பக் கொண்டு வரும் வினோதமான முயற்சியில், பெண் ஒருவர் 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி

டெல்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் ஒரு பெண்ணின் தந்தையை இறந்து போயுள்ளார்.

தன் தந்தை மீது பாசம் கொண்ட அப்பெண்ணிடம் ஒருவர் இறந்துபோன தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க புதிதாக பிறந்த குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூற, அப்பெண் மூடநம்பிக்கையில் 2 மாத குழந்தையை கடத்தியுள்ளார்.

அப்பெண் குழந்தையை நரபலி கொடுக்கும் திட்டத்தை ரகசியமாக யாரோ ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையைப் அப்பெண்ணிடமிருந்து மீட்டனர்.

உடனடியாக அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அப்பெண் நரபலிக்கு முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார். கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் 24 மணி நேரத்திற்குள் மீட்டனர்.  

பெண் ஒருவர் 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

delhi-woman-kidnaps-2-month-baby-sacrifice