வாந்தி எடுக்க பேருந்தில் தலையை வெளியே நீட்டிய பெண் - வாகனம் மோதி தலை துண்டான பரிதாபம்!
பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டிய பெண் உயிரிழந்துள்ளார்.
கோர விபத்து
உத்தரப்பிரதேசம், பிரதாப்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாப்லி. இவர் அங்கே காஷ்மீர் கேட்டில் இருந்து லூதியானா செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் வாந்தி எடுக்க ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார் அந்த நேரத்தில் பின்னால் இருந்த வாகனம், இந்த பேருந்தை ஓவர்டேக் சென்று செல்ல முயன்றுள்ளது.
பெண் பலி
சாலை குறுகலாக இருந்த நிலையில், இந்த பேருந்தை ஒட்டியபடியே அந்த வாகனம் சென்றுள்ளது. அதில் இளம்பெண்ணின் தலை பின்னால் வந்த வாகனத்தில் மீது கொடூரமாக மோதியது. இரண்டு வாகனங்களுக்கும் இடையே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது, அந்தப் பெண் அவரது சகோதரி, சகோதரி கணவர் மற்றும் அவர்களின் 3 குழந்தைகளுடன் பேருந்தில் பயணித்துள்ளார். அவர்களின் கண் முன்னால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.