பாலியல் வன்கொடுமை செய்த மகன்; தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி - அதிர்ச்சி!

Attempted Murder Delhi Sexual harassment Child Abuse Crime
By Sumathi Jan 08, 2023 05:18 AM GMT
Report

பாலியல் வன்கொடுமை செய்த நபரின் தாயை சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

டெல்லி, சுபாஷ் மோஹால் பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா(50). இவர் அங்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு வடக்கு கோண்டா என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த மகன்; தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி - அதிர்ச்சி! | Delhi Girl Shoots Mother Of Man Who Raped Her

திடீரென தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் வந்த போலீஸார் சிறுமியை கைது செய்தனர். விசாரணையில்,

தாயை சுட்ட சிறுமி

துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான பெண்ணின் 25 வயது மகன் அந்த 17 வயது சிறுமியை 2021ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அந்த இளைஞர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தான் 2 ஆண்டுகள் கழித்து அந்த இளைஞரின் தாயை சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார். எதற்காக இந்த செயலை சிறுமி செய்தார் என பல கோணங்களிக் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் வயிற்றில் குண்டு பாய்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.