டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து!
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கும்,தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இந்த விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துமவனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.