அதிகாலையில் அடுத்தடுத்து பலியான தாய், மகன் -வீட்டுக்குள் துடிதுடித்த தந்தை!

Fire Crime Accident
By Vidhya Senthil Oct 18, 2024 07:29 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

   அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகின  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி

டெல்லியில் உள்ள சாதரா பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் குப்தா .இவரது மனைவி பகவத் குப்தா .இவர்களுக்கு மகன் மணிஷ் குப்தா என்ற உள்ளார். இவர்கள் உள்பட மொத்தம் 5 பேர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனா்.

fire accident

இந்த நிலையில் இவர்களது வீட்டில் இன்று அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவெனப் பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறத் தொடங்கியது.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - நெஞ்சை பதைக்கும் கொடூரம்!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - நெஞ்சை பதைக்கும் கொடூரம்!

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்து மீட்புப் பணியில் இறங்கினர்.

தீவிபத்து

அப்போது தீவிபத்தால் ஏற்பட்ட விரும்புகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தது தெரிந்தது.இதையடுத்து அவர்களது உடல்களை காவல்துறை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர்.

delhi

மேலும் மயக்க நிலையிலிருந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.