டிராவிட் வைத்த நம்பிக்கையை காரணம் : உருகிய தீபக் சாஹர்
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட டிராவிட் தான் காரணம் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் நேற்று நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பொறுப்பாக விளையாடிய தீபக் சஹார் - புவனேஷ்வர் குமார் ஆகியோர் வெற்றியை தேடிக்கொடுத்தனர். தீபக் சாஹர் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பொறுப்புடன் செயல்பட்டு இந்திய அணிக்கு மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், இதைவிட சிறப்பாக விளையாடி நாட்டுக்கு வெற்றியை தேடி தர முடியாது என நினைக்கிறேன். ராகுல் சார் என்னை அனைத்து பந்துகளையும் விளையாடச் சொன்னார். அவர் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது சில இன்னிங்ஸில் நான் சிறப்பாக பேட் செய்திருக்கிறேன். அதனால் அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
மேலும் வெற்றிக்கான இலக்கு 50 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோது நம்பிக்கை ஏற்பட்டது. விக்கெட்டை இழக்காமல் இருந்தேன். பின்பு ரன்கள் குறைய குறைய சில ஷாட்டுகளை விளையாட தீர்மானித்தேன். சில ரிஸ்க்குகளை எடுத்தேன். எப்படியாவாது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திட வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன் எனவும் தீபக் சாஹர் கூறியுள்ளார்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
