தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம்...ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்

deepakchaharinjurycsk deepakchaharsrilankamatch deepakchaharmedicalreport
By Swetha Subash Feb 23, 2022 06:36 AM GMT
Report

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்று முடிந்தது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

இந்நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது காயம் ஏற்பட்டு எஞ்சிய போட்டியிலிருந்து பங்கேற்காமல் பவிலியன் சென்றார்.

மீண்டும் பந்துவீச மைதானத்திற்கு வரவில்லை. இதனால் தீபக் சாஹர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம்...ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? வெளியான மெடிக்கல் ரிப்போர்ட் | Deepak Chahar Medical Report After Being Injured

தீபக் சாஹர் மட்டுமே அனுபவம் உள்ள பந்துவீச்சாளராக சென்னை அணியில் இருப்பதால் அவரை 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே நிர்வாகமும் கலக்கத்தில் இருந்தது.

தற்போது அவர் இல்லை என்றால், வேறு ஒரு பந்துவீச்சாளரை தேட வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்படும். இந்த நிலையில், தீபக் சாஹரின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தீபக் சாஹருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய குறைந்தது 4 முதல் 5 வாரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதில் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தீபக் சாஹர் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.