20 வருஷத்திற்குப் பின்.. முதல் முறையாக பெண்ணுக்கு மரண தண்டனை - பின்னணி என்ன?
போதைப் பொருள் கடத்திய வழக்கில் பென் ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனை
உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது. 500 கிராமுக்கு மேல் கஞ்சா மற்றும் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் அது கடுங்குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அதன் வரிசையில், 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018ல் மரண தண்டனை வழங்கப்பட்ட சாரிதேவி ஜமானி எனும் 45 வயது பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது என மனித உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) தெரிவித்துள்ளது.
போதைப் பொருள்
விசாரணையில், இஸ்லாமிய நோன்பு மாதத்தில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாகவும், ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களை
தனது குடியிருப்பில் இருந்து விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக, சிகையலங்கார நிபுணர் யென் மே வொன் போதைப்பொருள் கடத்தலுக்காக 2004இல் தூக்கிலிடப்பட்டார்.