இந்திய விளையாட்டு உலகின் முதல் சூப்பர் ஹீரோ தயான் சந்த்!
விளையாட்டுத் துறைக்கான கேல் ரத்னா விருது, தயான்சந்த் கேல் ரத்ன என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் கேல்ரத்னா விருதுடன் சேர்க்கப்பட்டுள்ள தயான்சந்த் யார் அவர் பற்றிய சிறிய தொகுப்பு இதோ
பிரபல ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் அன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் அலகாபாத் நகரில், 29 ஆகஸ்ட் 1905ல் சமேஷ்வர் சிங், சாரதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் தயான்சந்த். இவருக்கு, உடன் பிறந்தோர் இரண்டு சகோதரர்கள். இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தனது 16வயதில் இந்தியப் போர்ப்படையில் சேர்ந்தார்.
பகல் பொழுதில் வேலை, இரவில் விளையாட்டுப் பயிற்சி. நிலவு வரும் வேலையில் பயிற்சி செய்வதால் இவரை இவரது நன்பர்கள் சந்த் என்று அழைத்தனர். சந்த் என்றால் ஹிந்தியில் நிலவு என்று அர்த்தம்.
இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை மந்திரவாதி என்று அழைத்தார்களாம்.1928ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் சந்த் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியா அந்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற செய்தியை ஒரு நாளிதழ் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது This is not a game of Hockey, but magic. Dhyan Chand is, in fact the magician of Hockey” அதாவது இது ஹாக்கி விளையாட்டல்ல, மாயாஜாலம். தயான் சந்த் இந்த ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என கூறினார்களாம்.
1935ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவின் ஒரு தலைசிறந்த கிரிக்கட் வீரர் டான் பிராட்மன் சந்த்-ஐ அடிலைடு மைதானத்தில் சந்தித்தார். அப்போது சந்த்-ஐ அவர் இவர் கிரிக்கட்டில் ரன்கள் சேர்ப்பது போல ஹாக்கியில் கோல்கள் அடிக்கிறார் என புகழாரம் சுட்டினார்.
ஹிட்லர் வியந்த தயான் சந்த்:
நாம் அனைவரும் ஹிட்லரை கண்டு வியந்திருப்பொம்,ஆனால் ஹிட்லரே தயான் சந்த்-ஐ கண்டு வியந்துள்ளார் ஆம் 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக். இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது, இந்தியா. ஆவலுடன் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர்.
இந்தியா வெற்றி பெற்றது. தயன் சந்த் அருமையாக விளையாடினார். தயான் சந்த்-இன் ஆட்டத்தை கண்டு வியந்த ஹிட்லர் அவருக்கு மேஜர் பதவி, ஜெர்மனி நாட்டுரிமை, மற்றும் பல சலுகைகளை அளித்தார். அவர் நினைத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
ஆனால் பணிவாக மறுத்துவிட்டார். ஒருமுறை சந்தின் ஹாக்கி மட்டையில் காந்தம் உள்ளதா என்று உடைத்துப் பார்த்தனர் அதிகாரிகள். அதற்கு பதில் கூறும் விதமாக அடித்த ஆட்டத்தில் ஒரு கைத்தடியை கொண்டு ஹாக்கி விளையாடினார். அதிலும் கோல்கள் அடித்தார்.
இவ்வாறு ஹாக்கி ஜாம்பவனாக இருந்த தயான் சந்த் 3ஆம் அக்டோபர் 1979ஆம் ஆண்டுகாலமானார்.அவர் இறந்த பிறகு கூட இன்றைய வரைக்கும் ஹாக்கியில் ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார்.தயான்சந்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தயான்சந்தின் பெயர் மேலும் நிலைத்திருக்கும் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.