இந்தியாவில் கொரோனா பாதிப்பின் போது இருந்தது பயத்தை ஏற்படுத்தியது - டேவிட் வார்னர்
கொரோனா உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் இருந்தது பயத்தை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனிடையே ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், இந்தியாவில் கொரோனா தீவிரமாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் நாங்கள் மைதானத்துக்கு செல்லும்போது கொரோனாவால் இழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலுடன் மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம் என்றும், அது பயத்தை ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார்.
ஆனால் மனிதாபிமான பார்வையில் உண்மையில் வருத்தமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.