CUP ஜெயித்தவருக்கே இந்த நிலைமையா..? SRH அணி செய்த காரியம் - வேதனையில் Warner!
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சமூக வலைத்தளங்களில் தன்னை பிளாக் செய்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.
சன்ரைஸர்ஸ்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்நிலையில் அவரை பாராட்ட நினைத்த அதே ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வீரர் டேவிட் வார்னருக்கு சன்ரைசர்ஸ் அணி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரை வாழ்த்த நினைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் ரைசர்ஸ் அணியின் பக்கத்தை வார்னர் தேடியுள்ளார். அப்போது அவரை அந்த அணி பிளாக் செய்திருந்தது.
வார்னர் வேதனை
இதனால் ஏமாற்றமடைந்த வார்னர், அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதில் "டிராவிஸ் ஹெட் பற்றி பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள்.
அது மட்டுமில்லாமல் எக்ஸ் தள பக்கத்திலும் பிளாக் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சன்ரைஸர்ஸ் அணியின் ரசிகர்களும், வார்னரின் ரசிகர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். கோப்பை வென்று கொடுத்தவருக்கே இந்த நிலைமையா? என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏனெனில் கடந்த 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்துள்ளார் வார்னர். மேலும், 2019 வரை அனைத்து தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றியும் அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.