அதிர்ச்சி முடிவெடுத்த டேவிட் வார்னர்; இத எதிர்பார்க்கவே இல்லையே - வேதனையில் ரசிகர்கள்!
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்து மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் அவருக்கு விடைகொடுக்க ஆஸ்திரேலிய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் தான் ஓய்வுபெறுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் டேவிட் வார்னர்.
ஓய்வு
இதுகுறித்து சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது "ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உலகக்கோப்பை தொடரின் போதே தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறேன். அதன்படி இந்தியாவில் கோப்பையை வென்றதே மிகப்பெரிய சாதனை தான்.
அதன்பின் இன்றே ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவெடுத்து கூறிக்கொள்கிறேன்" என்றார். திடீரென வார்னர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.