பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து - பயணிகளே ரயில் பெட்டிகளை கைகளால் தள்ளும் வீடியோ பதிவு வைரல்

uptrainaccident dauralatrainfire trainenginefire
By Swetha Subash Mar 06, 2022 09:11 AM GMT
Swetha Subash

Swetha Subash

in விபத்து
Report

உத்தரபிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி அதிகாலை 5.30 சென்ற பயணிகள் ரயில் தவுராலா ரயில் நிலையத்தை 7.10க்கு வந்தடைந்த போது

திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறி இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிவதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி ஓடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரண்டு பெட்டிகளில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவும் என்பதால், இரண்டு பெட்டிகளுக்கான இணைப்பை துண்டித்துவிட்டு பயணிகளின் உதவியுடன் ரயிலை அப்புறப்படுத்தினர். 

இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் பெட்டிகளை பயணிகள் கைகளால் தள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து - பயணிகளே ரயில் பெட்டிகளை கைகளால் தள்ளும் வீடியோ பதிவு வைரல் | Daurala Train Engine Caught On Fire Near Meerut

தீ விபத்து குறித்து மீரட் நகர் ரயில் நிலைய கண்காணிப்பாளர் கூறுகையில்,

'இந்த விபத்தால், யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவித்தார்.