கை, கால்களை மகள்கள் பிடிக்க, துடிக்க துடிக்க கொடூரமாக அடித்துக் கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம், மரேவாடா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா (45). இவருடைய மனைவி ஷோபா (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஷோபா, தார்வார் தாலுகாவில் மகளிர் அணியில் உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில், சொத்துக்கள் அனைத்தும் ஈரப்பாவின் பெயரில்தான் உள்ளது. ஆனால், ஷோபா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டாள். இதனால், ஈரப்பாவிடம் அடிக்கடி சொத்தை விற்கும்படி கூறி வந்துள்ளாள். ஆனால், ஈரப்பா இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, மகள்களும் ஈரப்பாவிடம் சொத்துக்களை பகிர்ந்து கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளனர். ஆனால், ஈரப்பா மறுத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த ஷோபாவும், அவரது இரு மகள்களும் ஈரப்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த வாரம் ஒரு நாள் இரவு வீட்டில் இருந்த ஈரப்பாவை ஷோபா கட்டையால் அடித்துள்ளார்.
அப்போது, ஈரப்பா தப்பி ஓட முடியாதபடி இரு மகள்களும் ஈரப்பாவின் கால்களையும், கைகளையும் பிடித்துள்ளனர். ஷோபா ரத்தம் சொட்ட சொட்ட கட்டையால் ஈரப்பாவை கடுமையாக தாக்கினார்.
வலி தாங்க முடியாமல் ஈரப்பா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு, ஷோபா கணவர் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் ஷோபா மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஷோபாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பயந்து போய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் ஷோபாவையும், அவரது 2 மகள்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.