ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை துடிக்க துடிக்க கொன்ற சிறுமி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

coldbloodmurder daughterkillsmother crimestory spotdead
By Swetha Subash Mar 27, 2022 10:41 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை, நண்பர்களுடன் சேர்ந்து சிறுமி கொலை செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார் 2-வது தெருவை சேர்ந்த தம்பதி மாடசாமி-முனியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் முனியலட்சுமி மாநகராட்சில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முனியலட்சுமி வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முனியலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முனியலட்சுமியின் 17 வயது மகள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்

இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை துடிக்க துடிக்க கொன்ற சிறுமி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் | Daughter Kills Own Mother With The Help Of Friends

முனியலட்சுமியின் 17 வயது மகள் கல்லூரியில் படித்தபோது ஆண் நண்பர்களான கண்ணன் (20) மற்றும் தங்ககுமார் (22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் தங்ககுமாருக்கும், சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி இருக்கிறது.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் சக ஆண் நண்பர்களுடனும் சிறுமி அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை தாய் முனியலட்சுமி கண்டித்திருக்கிறார்.

ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை துடிக்க துடிக்க கொன்ற சிறுமி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் | Daughter Kills Own Mother With The Help Of Friends

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் முனியலட்சுமி, ஆண் நண்பர்களுடன் பேச கூடாது என சிறுமியை கண்டித்துள்ளார். இதை தனது நண்பர் கண்ணன் மற்றும் காதலன் தங்ககுமாரிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து இருவரும் தங்களது மற்றொரு நண்பரை அழைத்து கொண்டு முனியலட்சுமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சமையல் செய்து கொண்டிருந்த தாய் முனியலட்சுமியை சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து கீழே தள்ளி துணியால் கழுத்தை நெரித்து அங்கிருந்த கத்தியால் முனியலட்சுமியின் உடலில் கீறி உள்ளனர்.

இதில் முனியலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இந்த தகவல்கள் சிறுமி போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் கண்ணனை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான தங்ககுமார் மற்றும் அவரது நண்பரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.