டிவியை ஆஃப் செய்த மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்

India Maharashtra
By Thahir Sep 08, 2022 09:16 AM GMT
Report

டிவியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரை கடித்து குதறிய மருமகள் 

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார்.

அப்போது மருமகள் விஜயா அதிக சத்தத்துடன் டிவி பார்த்து கொண்டு இருந்துள்ளார். தான் பஜனையில் இருப்பதால் டிவியின் சத்தத்தை குறைத்து பார்க்கும் படி மாமியார் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிவியை ஆஃப் செய்த மாமியார் கையை கடித்து குதறிய மருமகள் | Daughter In Law Biting Mother In Law S Hand

அதில் காதில் வாங்காத மருமகளோ சத்தத்தை குறைக்காமல் டிவி பார்த்துள்ளார். இதனால் மாமியார் விருஷாலி டிவி வந்து ஆஃப் செய்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த மருமகள் விஜயா மாமியாரின் கையை பிடித்து விரல்களை கடித்துள்ளார்.

மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மகன் மனைவியை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் விடாமல் கடியை மட்டும் நிறுத்தாத மருமகள் தனது கணவனை கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

பின்னர் மாமியார் விருஷாலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.