மகளின் செயலால் விபரீத முடிவை எடுத்த தந்தை

love daughter father sucide
By Praveen Apr 16, 2021 04:48 PM GMT
Report

மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதையும் மீறி தனபாலின் மகள் அந்த வாலிபரையே திருமணம் செய்துகொண்டார். இதனால் வாழ்க்கையை வெறுத்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து, தனபாலின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.