தலைவரே... எழுந்து வா... - டி.ஆர்.ராஜேந்தர் போட்டோ ஏந்தி Cool சுரேஷ் கோவில் விளக்கேற்றி பிரார்த்தனை - வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
இதனையடுத்து, நடிகரும், அவரின் மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டி.ராஜேந்தர் பூரண குணம் பெற வேண்டும் என்று திருவண்ணாமலை கோவிலில் நெய் விளக்கேற்றி நடிகர் Cool சுரேஷ் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.
தற்போது, கையில் டி.ராஜேந்தர் போட்டோ ஏந்தி திருவண்ணாமலையில் சிறப்பு பூஜை செய்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.