சிறையில் இருந்து விடுதலையாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
சென்னை புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாளை காலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி,பெஞ்சமின் தெரவித்துள்ளனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை மாநராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அரைநிர்வாணமாக இழுத்து வரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு சாலை மறியலில் அவர் மீது 2 வழக்குகளும்,ரூ.5 கோடி மீன் மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த 3-ம் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் அவர் திருச்சியில் தங்கி அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது.
புழல் சிறையில் உள்ள டி.ஜெயக்குமார் நாளை காளை 6 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார்.என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி,பெஞ்சமின் தெரிவித்துள்ளனர்.