திமுக தொண்டரிடம் சவுண்ட் விட்ட சி.வி.சண்முகம்

cvshanmugamslamsstalin admkcampaign2022elections tiruppurcampaign
By Swetha Subash Feb 15, 2022 01:07 PM GMT
Report

விழுப்புரத்தில் நடந்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் திமுகவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 தேதி ஒரு கட்டமாக நடைபெற உள்ளது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையடுத்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் திமுகவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம் மிரட்டல்,உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் எதற்கும் பயப்பட மாட்டேன் என பேசினார்.

மேலும் அவர் முதலமைச்சரையும் அங்கு கூடியிருந்த காவல்துறையினரையும் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கைதட்டி,ஆரவாரம் செய்தனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.