“அப்போ எனக்கு பசிக்கும்ல..நான் சாப்பிட கூடாதா?” - பீட்சாவிற்காக கைகூப்பி மன்றாடும் பூனை, வைரலாகும் வீடியோ பதிவு
செல்லப்பிராணிகளான நாய், பூனைகள் செய்யும் சேட்டைகளுக்கு எப்போதுமே ரசிகர் பட்டாளம் அதிகம். அப்படியான வீடியோக்கள் நிறைய அடிக்கடி தாறுமாறாக வைரல் ஆகி வரும்.
நாய் பூனைகளுக்கு எப்போதும் மனிதர்கள் உண்ணும் உணவின் மீதும் அவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அவற்றிற்கு அதிகமாகவே இருக்கும்.
அதை வெளிப்படுத்தும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒருவர் சாப்பிடும் பீட்சாவை ஒரு பூனை மன்றாடி கேட்கிறது.
பீட்சாவை கையில் வைத்திருப்பவர் அவரது மொபைலில் எடுத்துள்ள வீடியோவில்,
மேலிருந்து கீழே நிற்கும் ஒரு அழகான கருப்பு நிற பூனை இரு கால்களில் நின்றுகொண்டு இரு முன்னங்கால்களையும் கூப்பி கைபோல் பாவித்து முன்னும் பின்னும் அசைத்து கெஞ்சி அவர் கையில் வைத்திருக்கும் பீட்சாவை கேட்கிறது.
இந்த வீடியோ கேட்ஸ் ஆஃப் இன்ஸடாகிராம் என்னும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூனை பேசுவது போன்ற கேப்ஷன் அந்த விடியோவிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், "எல்லோருக்கும் வணக்கம்! அனைத்து புதிய பாலோயர்ஸுக்கும் நன்றி! எல்லா புதிய நபர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்த இந்த நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்!
என் பெயர் வார்ட்ஸ்வொர்த், வாடி என்று அழைப்பார்கள்! நான் எப்போதும் உணவுக்காக மன்றாட விரும்புகிறேன்! எனக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர், ஜாக்ஸ், கட்லர் மற்றும் மிஸ்டரி!" என குறிப்பிடப்பட்டுள்ளது.