நீதிமன்றம் மீண்டும் வைத்த செக்.....வெளிவர முடியாமல் தவிக்கும் செந்தில் பாலாஜி
இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் செந்தில் சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜி - ED
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மீண்டும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
எம்.எல்.ஏ'க்கள் மற்றும் எம்.பி'க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில், இன்று நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்று அவருடைய நீதிமன்ற காவல் கேடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் அதாவது வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி அவர் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதுவரை அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.