பாஜகவை ராஜினாமா செய்த சி.டி.ஆர். நிர்மல் குமார் - வரவேற்ற அதிமுக...காரணம் என்ன?
பாஜகவில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்து வந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.
பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
வேதனை அடைந்தது தான் மிச்சம்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநுாறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது.
சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.
என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 5, 2023
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் ? pic.twitter.com/jcXAtJroid
மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, அவரது இல்லத்தில் இன்று, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் திரு. @CTR_Nirmalkumar அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். pic.twitter.com/tH9G5v8xXD
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2023