விடைப்பெறுகிறாரா பிராவோ? இவருக்கு பதில் இந்த வீரரை தான் ஏலத்தில் எடுக்கப்போகிறதா சிஎஸ்கே?
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே தனது முன்னாள் வீரர்கள் பலரை மீண்டும் அணிக்குள் எடுக்க திட்டமிட்டு வருகிறது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அனைத்து அணிகளும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது.
அந்தவகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதன்மை தேர்வாக, ரவீந்திர ஜடேஜாவும் அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனியும்,
3வது மற்றும் 4வது தேர்வாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோரும் அணிக்குள் தக்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த அணியில் இருந்து வெளியேறிய பழைய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வரலாம் எனத் தெரிகிறது.
இந்த பட்டியலில் முதன்மை தேர்வாக தமிழக வீரர்களான விஜய் சங்கரும், ரவி அஸ்வினையும் சிஎஸ்கே ஏலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுவைன் பிராவோவின் இடத்திற்கு ஜேசன் ஹோல்டரை குறிவைத்துள்ளது சிஎஸ்கே.
தற்போது ஐதராபாத் அணியின் மிக முக்கிய ஆல்ரவுண்டராக இருக்கும் ஹோல்டர் 2021ம் ஆண்டு ஐபிஎல்-ல் 8 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
பேட்டிங்கிலும் நல்ல அதிரடியை காட்டுவார் என்பதால் பிராவோவின் இடத்திற்கு நிச்சயம் சிஎஸ்கே முயலும்.