வரும் ஜனவரியில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி எதிராக ஆட்டங்கள் தொடக்கம்... - விவரங்கள் உள்ளே...!

Cristiano Ronaldo Lionel Messi Football
By Nandhini Dec 31, 2022 12:15 PM GMT
Report

வரும் ஜனவரியில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி எதிராக ஆட்டங்கள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி கால்பந்து ரசிகர்களால் இதுவரை கண்டிராத மிகவும் உற்சாகமான கால்பந்து விளையாட்டாகும். அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.

அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி

இந்நிலையில், லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரும் வரும் 2023ம் ஆண் ஜனவரியில் 2 தனித்தனி நாடுகளில் முதல் முறையாக விளையாட உள்ளனர். இவர்கள் பர்சிலோனா மற்றும் ஸ்போர்டிங் CPஇல் மில்லினியத்தின் முதல் முறையாக விளையாட உள்ளனர். மெஸ்ஸி PSG உடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டார்.

அதேபோல் ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல் நாசருடன் இரண்டரை வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல் நாசருக்கு ஒரு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் ஜூன் 2025 வரை நீடிக்கும்.

இது குறித்து, அல்நாசர் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த பதிவில், 5 முறை பலோன் டி'ஓர் வென்றவர் அணியின் T.Shift டை உயர்த்திப்பிடிக்கும் படத்தை வெளியிட்டு, அந்த பதிவில், "இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், நமது தேசம் மற்றும் எதிர்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக இருக்க ஊக்குவிக்கும் ஒரு கையெழுத்து" என்று கிளப் பதிவிட்டார்.

cristiano-ronaldo-lionel-messi-foot-ball

இடைநீக்கம் செய்யப்பட்ட ரொனால்டோ

மான்செஸ்டர் யுனைடெட் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது ரொனால்டோ ஒரு இலவச முகவராக இருந்தார், அவர் மேலாளர் எரிக் டென் ஹாக் மற்றும் கிளப்பின் உரிமையாளர்களை விமர்சித்தார்,

இதனையடுத்து, தற்காலிகமாக ரொனால்டோ இடைநீக்கம் செய்யப்பட்டார். நடைபெற்று முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டி காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோற்றதால் கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார் ரொனால்டோ.