பிறந்த பெண் குழந்தையை முதன்முதலாக உலகிற்கு காட்டிய ரொனால்டோ - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து
தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதனிடையே ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
இம்முறை இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ ஜோடி தெரிவித்திருந்தனர். ஆனால், இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அதில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும், ஒரு பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும் ரொனால்டோ சோகமான பதிவை வெளியிட்டார்.
ஆண் குழந்தை இறந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து ரொனால்டோவிற்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், பிறந்த தன் பெண் குழந்தையை உலகிற்கு காட்டியுள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Forever Love…❤️?? pic.twitter.com/x18W34rYRM
— Cristiano Ronaldo (@Cristiano) April 30, 2022