திருச்சியில் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை
Anbil Mahesh Poyyamozhi
By Fathima
திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும் திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனியார் பள்ளிகளிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
