இந்திய அணியில் இடம் இல்லை - நடிகராக மாறிய முன்னாள் வீரர்

India Cricket BCCI Sreesanth
By mohanelango Jun 14, 2021 08:02 AM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கியதால் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவரால் தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை கடந்த 2019-ம் ஆண்டு ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீசாந்த் திரைப்படங்களை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். ஒரு சில மலையாள படங்களில் நடித்தவர் தற்போது பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.

ராதாகிருஷ்னன் என்பவர் இருக்கும் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்.