ஒரே ஒரு வீடியோ தான் போட்டேன்..ஒட்டு மொத்த கவணமும் என் பக்கம் தான் - தமிழக வீரர் ஷாருக் கானின் நச்ச் செயல்
சையது முஸ்தாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்காக தனி ஆளாக நின்று வெற்றியை தேடி தந்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பொலார்டாக உருவெடுக்கும் அனைத்து திறமையும் கொண்டவர் தமிழக வீரர் ஷாரூக்கான்.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அல்லது டி20 தொடரில் ஷாரூக்கான் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியில் ஷாரூக்கான் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் ஷாரூக்கான் துவண்டு போகாமல் அதற்கு பதில் என்ன செய்தால் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று யோசித்தார்.
அப்போது, இந்திய அணியில் உள்ள டாப் பேட்ஸ்மேன்கள் யாருக்கும் சுழற்பந்துவீச தெரியாது.
இதனால் தாம் சுழற்பந்துவீச கற்று கொண்டால், அணியில் தமக்கு இடம் கிடைப்பதில் சாதகமாக இருக்கும் என்று முடிவு எடுத்த அவர் அதற்கான வேளையில் இறங்கினார்.
ஷாரூக்கான் நல்ல உயரம் என்பதால், அவர் சுழற்பந்துவீசும் போது, அது நல்ல பவுன்சை தந்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை தரும்.
இதனால் தற்போது பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டுக்கும் பயிற்சி எடுத்து வருகிறார் இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷாரூக்கான் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக வீரர் ஷாரூக்கானும், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரூம் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்களுக்கு காயம் இல்லை கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு பதிலாக பிரதான அணியில் இவ்விருவரும் இடம்பெறுவார்கள்.
ஷாரூக்கான் தனது சுழற்பந்துவீச்சு திறனை மெருகேற்றி கொண்டால், அது இந்திய அணிக்கு செம பிளஸ் பாயின்டாக இருக்கும்.