RCB ரசிகர்கள் மோசமா திட்டுவாங்க; என் குடும்பத்தையும்.. - தினேஷ் கார்த்திக் வேதனை!
பெங்களூரு அணியின் ரசிகர்கள் குறித்து அந்த அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடர்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, குஜராத் என பல அணிகளில் அவர் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் சக இந்திய வீரரான அஷ்வினின் யூடியூப் சேனல் நேர்காணலில் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "பெங்களூரு ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். யாராவது பெங்களூரு அணி வீரர்களை பற்றி பேசினால் அவர்கள் நிச்சயம் அந்த வீரரை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.
மோசமாக திட்டுவார்கள்
ஆனால், நானே ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால், எனது சமூகவலைத்தளங்களில் என்னை மோசமாக திட்டுவார்கள். என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தினர், என் உடனிருப்பவர்கள் என அனைவரையும் திட்டுவார்கள்.
16 ஆண்டுகளாக விளையாடும் ஒரு அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது வியப்புக்குரியது. உலகில் உள்ள பல பேருக்கு இந்த அணியையும், அவர்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என கொண்டு சேர்ப்பது சாதாரணமான விஷயம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.